வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

சாங்கியாயன மகரிஷி கோத்ர வங்குசங்கள்



சாங்கியாயன மகரிஷி கோத்ர வங்குசங்கள்


குடகோலதவரு - குடிகேலாரு :- குடகோலதவரு என்னும் பெயர்தான் குடிகேலாரு என மருவி வழங்கப்படுகின்றது. ரம்பம் போல் இருக்கும் வளைந்த நெல்லரிவாளுக்குத் தெலுங்கில் குடகோலி என்றும் கன்னடத்தில் குடகோல என்றும் பெயர். இவர்கள் செல்வந்தர்களாக நில புலன்கள் மிக்கவர்களாக வாழ்ந்து இருக்கின்றனர்.

உம்மிடிதவரு :- ஆந்திராவில் உள்ள உம்மிடி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

கற்பூரதவரு :-  ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மனுக்கும்மற்ற ஆலயங்களுக்கும் கற்பூரம் கொடுக்கும் தொண்டு செய்தவர்.

கொண்டவன்தவரு :-  இருமலைகளுக்கு இடையே இருக்கும் மலைவளைவுகள் சந்துகள் இவற்றினுக்குக் கொண்டவன் என்று பெயர். இவ்விடங்களைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

செங்கல்வதவரு :-  பூசனைக்குக் குறிப்பாக செங்கல்வ மலர்களைப் பயன்படுத்துபவர்.

மோஹனதவரு :-  பாசம் மிகுந்தவர்அன்பு கொண்டவர்.

பூரணயதவரு :-  இவ்வம்சத்தில் பூரணய்யா என்பவர் புகழ் பெற்று இருந்து இருக்கலாம். அவருடைய வம்சம்.

ஏறத்தாழ அனைத்து கிருஹ சூத்திரங்களிலும் தர்ப்பணங்களின் போது திருப்தி செய்யப்படும் பிரம்மன்தேவர்கள்பிரஜாபதிகள்சப்தரிஷிகளுக்கு அடுத்தபடியாக வரும் முக்கிய முனிவர்களில் ஒருவராக சாங்கியாயனர் சொல்லப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக